• May 05 2024

யாழிலிருந்து தென்பகுதிக்கு வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்..!samugammedia

Sharmi / Nov 17th 2023, 3:41 pm
image

Advertisement

கடந்த 28 ஆம் திகதி கம்பகா மாவட்டத்தில் தங்கி நின்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன்  வடக்கை சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ம் திகதி கம்பகாவிற்கு  சென்ற கணவன் தான் அங்கு  சேர்ந்து விட்டதாகவும், அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளர்.

கடந்த 30 ஆம் திகதி வரை தனது  குடும்பத்தாருடன் தொலைபேசியில்  பேசியுள்ளார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து தனது கணவரை கண்டுபிடித்து தர ஆவன செய்துதவுமாறு அவரது  மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார்.



யாழிலிருந்து தென்பகுதிக்கு வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்.samugammedia கடந்த 28 ஆம் திகதி கம்பகா மாவட்டத்தில் தங்கி நின்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன்  வடக்கை சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ம் திகதி கம்பகாவிற்கு  சென்ற கணவன் தான் அங்கு  சேர்ந்து விட்டதாகவும், அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளர்.கடந்த 30 ஆம் திகதி வரை தனது  குடும்பத்தாருடன் தொலைபேசியில்  பேசியுள்ளார்.அன்றிலிருந்து இன்றுவரை அவர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.  இதையடுத்து தனது கணவரை கண்டுபிடித்து தர ஆவன செய்துதவுமாறு அவரது  மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement