கனடா கியூபிக் மாகாணத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கியூபெக் மாகாணத்தின் ஜோலியேட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 46 வயதான Ianik Lamontagne மற்றும் மூன்று வயதுடைய Antoine மற்றும் Tristan ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளையும் கொன்ற குறித்த நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.