• Jul 07 2025

திருமலையில் இடம்பெற்ற இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Chithra / Jul 6th 2025, 1:31 pm
image


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று  திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன்,  திருகோணமலை மாநகர மேயர் க . செல்வராஜா  கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர்  சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.  எனவும் அவர் நினைவுகூர்ந்தார். 



திருமலையில் இடம்பெற்ற இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று  திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன்,  திருகோணமலை மாநகர மேயர் க . செல்வராஜா  கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர்  சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.  எனவும் அவர் நினைவுகூர்ந்தார். 

Advertisement

Advertisement

Advertisement