கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் நேற்று மோதின.
இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும், ஆட்ட நேர முடிவில் 3 - 3 என சம நிலையில் வந்ததை அடுத்து பெனால்டி கிட் முறை கொண்டுவரப்பட்டது.
அதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
இந்த நிலையில் பிரபல பிரித்தானிய ஊடக நட்சத்திரம் பியர்ஸ் மோர்கன் தெரிவிக்கையில்,
கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரான்ஸ் அணி வீரர்களுக்கு வேண்டுமென்றே விஷம் அளித்ததாக சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் திணறியபடி விளையாடியதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் அர்ஜென்டினா முதல் பாதியில் இரு கோல்களுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. இதனிடையே பிரான்ஸ் வீரர்கள் ஒட்டகக் காய்ச்சலுக்கு இலக்கானதாக சிலர் தெரிவிக்க, இது கண்டிப்பாக தொற்றாக இருக்க வாய்ப்பில்லை எனவும் பிரான்ஸ் வீரர்களுக்கு திட்டமிட்டே விசம் அளிக்கப்பட்டுள்ளது என பியர்ஸ் மோர்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.