நேற்றைய தினம் இடம்பெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வினா தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தெரிவித்ததாக அவர்களது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வினாப்பத்திரத்தின் 42 ஆவது கேள்வியில் சர்வதேச விமான நிலையங்கள் இரண்டினைக் குறிப்பிடும் விடை எது என கேட்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை,
கட்டுநாயக்க மற்றும் மத்தள
மத்தள மற்றும் பலாலி
இவ்வாறு விடைகள் கோரப்பட்டிருந்தது.
இங்கு குறிப்பிட்ட 3 உம் சர்வதேச விமான நிலையங்கள் என பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரால் இந்த முறைப்பாடுகள் பரீட்சை திணைக்களத்துக்கு வந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன கூறுகையில், விடைத்தாள்களை சரிபார்க்கும் முன் வல்லுநர் குழுவால் இந்த வினா சரிபார்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் சிக்கல் நேற்றைய தினம் இடம்பெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வினா தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தெரிவித்ததாக அவர்களது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.வினாப்பத்திரத்தின் 42 ஆவது கேள்வியில் சர்வதேச விமான நிலையங்கள் இரண்டினைக் குறிப்பிடும் விடை எது என கேட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள மத்தள மற்றும் பலாலி இவ்வாறு விடைகள் கோரப்பட்டிருந்தது. இங்கு குறிப்பிட்ட 3 உம் சர்வதேச விமான நிலையங்கள் என பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரால் இந்த முறைப்பாடுகள் பரீட்சை திணைக்களத்துக்கு வந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன கூறுகையில், விடைத்தாள்களை சரிபார்க்கும் முன் வல்லுநர் குழுவால் இந்த வினா சரிபார்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.