• May 19 2024

சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசம் அவதானித்து விட்டது-சபையில் முழங்கிய எம்.ஏ.சுமந்திரன்..!samugammedia

Sharmi / May 11th 2023, 2:27 pm
image

Advertisement

இறுதிய கட்ட யுத்ததில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளக பொறிமுறைமூலமே வழங்கப்போவதாக குறிப்பிட்ட அரசாங்கம் இன்று நஸ்டஈட்டை பெறுவதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றை நாடியுள்ளதாகவும் இந்த செயற்பாடானது சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் செல்ல தயாரில்லை எனவும் உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறிவரும் அரசு, இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றோம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றியும் கலந்துரையாடப்படும்.

சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதையும் ரணிலுக்கு எடுத்துரைக்கவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசம் அவதானித்து விட்டது-சபையில் முழங்கிய எம்.ஏ.சுமந்திரன்.samugammedia இறுதிய கட்ட யுத்ததில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளக பொறிமுறைமூலமே வழங்கப்போவதாக குறிப்பிட்ட அரசாங்கம் இன்று நஸ்டஈட்டை பெறுவதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றை நாடியுள்ளதாகவும் இந்த செயற்பாடானது சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கடந்த 2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் செல்ல தயாரில்லை எனவும் உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறிவரும் அரசு, இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றோம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றியும் கலந்துரையாடப்படும்.சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதையும் ரணிலுக்கு எடுத்துரைக்கவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement