தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம் குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2009 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாடின்றி இருந்ததாகவும் ஆனால் 2009 ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் இடம்பெறவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்குகின்றது-அமெரிக்கா அறிவிப்பு SamugamMedia தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம் குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.2009 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாடின்றி இருந்ததாகவும் ஆனால் 2009 ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் இடம்பெறவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.