இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தள்ளார்.
எனினும் சீனாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.