அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 25 வயதான ரூடி ஃபரியாஸ் என்பவர் 2015
இல் தனது 17 வயதில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. திடீரென 8
ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்வலர் குவானெலிடம், ரூடி தனக்கு நேர்ந்த கொடுமையை
தெரிவித்துள்ளார்.
அப்போது தான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள்
அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரிய வந்தது.
இது குறித்து குவானெல் தெரிவிக்கையில்,
ரூடியின் தாயார் அவரை
ரூடியின் தந்தையாக இருக்குமாறு வற்புறத்தியிருக்கிறார். ஒரு அடிமையைப் போல
வாழ்ந்து சோர்வானதால் 201 இல் ரூடி வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு 2
நாட்களில் திரும்பி வந்திருக்கிறான்.
அப்போது தான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள்
அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரிய வந்தது.
ஆனால் ரூடியின் தாயார் அவனிடம் ஏதாவது வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார்.
அவனது தாயார் படுக்கையில் தனது அருகில் படுக்க வைத்து அப்பாவாக நடிக்க
வற்புறுத்தியுள்ளார். இது பிடிக்காமல், தப்பிப்பதற்காக ஃபரியாஸ்
படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தனது கணவராக இருந்தாக
வேண்டும் என்று தாயார் ஜேனி, ரூடியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
மேலும் அவனுக்கு போதை மருந்துகளும் அளித்திருக்கிறார். இதனால் பயந்து
பொலிஸாரிடம் நாடாமல் இருந்துள்ளார். இது வரை ஃபரியாஸிற்கு இந்த பெண்
செய்ததை போல் ஒரு தாய் தன் குழந்தைக்கு செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.
அந்த சிறுவனை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல
காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். அந்த குழந்தை கடுமையாக
துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர் குவானெல் தெரிவித்திருக்கிறார்.