ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்றையதினம் காலை 10.30 மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன்,முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் கஜதீபன், பிரதேசபை தவிசாளர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.