மத்திய மலைநாட்டில் இன்று மதியம் முதல் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் தேக்கங்களில் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் நீர் வெளியேற்றம் செய்ய படுகிறது இன்று மதியம் முதல்.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய பொறுப்பதிகாரி யும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.