விமானத்தின் இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மும்பை டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தில் மலம் கழித்ததாகவும்இ சிறுநீர் கழித்ததாகவும் கூறி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாகவும்,எச்சில் துப்பியதற்காகவும் தவறான நடத்தையை கேபின் பணியாளர்கள் கண்டறிந்ததாகவும், அதைத் தொடர்ந்து, விமானத்தின் கேபின் மேற்பார்வையாளரால் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விமான கேப்டனுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதால், விமானம் டெல்லி விமான
நிலையத்தை அடைந்ததும் ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட
பயணியை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் மலம் கழித்த பயணிக்கு சிக்கல். அதிர்ச்சியடைந்த சக பயணிகள். நடந்தது என்ன samugammedia விமானத்தின் இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மும்பை டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தில் மலம் கழித்ததாகவும்இ சிறுநீர் கழித்ததாகவும் கூறி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.அவர் அமர்ந்திருந்த இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாகவும்,எச்சில் துப்பியதற்காகவும் தவறான நடத்தையை கேபின் பணியாளர்கள் கண்டறிந்ததாகவும், அதைத் தொடர்ந்து, விமானத்தின் கேபின் மேற்பார்வையாளரால் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், விமான கேப்டனுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்
சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதால், விமானம் டெல்லி விமான
நிலையத்தை அடைந்ததும் ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட
பயணியை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.