• May 04 2024

மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர்...! உயிரைக் காப்பாற்றிய நாய்...! ஒரு நொடியில் நிகழ்ந்த அதிசயம்..!samugammedia

Sharmi / May 12th 2023, 10:17 am
image

Advertisement

மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய நாய் ஒன்றுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

5 வயதான கௌமே என்ற நாய்க்கே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயதுடைய  நபர் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்தபடி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கௌமே கண்டுள்ளது. ஐந்தே வயதான கௌமே சாதுர்யமாக செயற்பட்டு இடைவிடாது தொடர்ந்து குரைத்துள்ளது.

இதனால் நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்தமையால் , அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்துள்ளனர்.

அப்பொழுது, அந்நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதுடன் , உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதை தொடர்ந்து கௌமே என்ற அந்த நாய்க்கு அவரது உயிரை காப்பாற்றியமையால் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.



மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர். உயிரைக் காப்பாற்றிய நாய். ஒரு நொடியில் நிகழ்ந்த அதிசயம்.samugammedia மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய நாய் ஒன்றுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. 5 வயதான கௌமே என்ற நாய்க்கே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயதுடைய  நபர் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்தபடி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கௌமே கண்டுள்ளது. ஐந்தே வயதான கௌமே சாதுர்யமாக செயற்பட்டு இடைவிடாது தொடர்ந்து குரைத்துள்ளது.இதனால் நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்தமையால் , அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது, அந்நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதுடன் , உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதை தொடர்ந்து கௌமே என்ற அந்த நாய்க்கு அவரது உயிரை காப்பாற்றியமையால் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement