லண்டனில் ஊழியர் ஒருவர் நவீன சிறுநீர் கழிப்பிடத்தால் நசுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொலைநோக்கி சிறுநீர் கழிப்பிடங்கள் மத்திய லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது மக்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கான இடங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான வழியாகும். இந்த நிலையில், சாரிங் கிராஸ் சாலை பகுதியில் நபர் ஒருவர், தெரு மட்டத்திற்கு கீழே தொலைநோக்கி சிறுநீர் கழிப்பறைக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்நபரை காப்பாற்ற முயற்சித்தது. சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த நபர் மீட்கப்பட்டபோதும் அவர் பரிதாபகமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
'வெஸ்ட் எண்டில் உள்ள இந்த தளத்தில் இன்று பரிதாபமாக இறந்த ஊழியரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும், ஆழ்ந்த அனுதாபங்கள்.
நாங்கள் எங்கள் ஒப்பந்ததாரர் மற்றும் அவசரகால சேவைகளை ஆதரிக்கும் தளத்தில் இருந்தோம், மேலும் எங்களால் முடிந்த எந்த வகையிலும் அனைத்து விசாரணைகளுக்கும் உதவுவோம்' என தெரிவித்துள்ளார்.