• Sep 17 2024

கனடாவில் உக்ரைன் ஏதிலிச் சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

Tamil nila / Dec 14th 2022, 10:49 pm
image

Advertisement

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதான உக்ரைன் ஏதிலிச் சிறுமி உயிரிழந்துள்ளார்.


கனடாவின் மொன்ட்றியலின் Ville-Marie borough இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் வெளியிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.


மாரியா என்ற சிறுமியும் அவரது சகோதரனும், சகோதாரியும் அருகாமையில் உள்ள பாடசாலைக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


பாதையை கடந்த போது வாகனமொன்று சிறுமியை மோதிச் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் பின்னர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


பாடசாலை வலயத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொன்றியல் வீதியில் இந்த ஆண்டில் 4 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


விபத்தில், உயிரிழந்த உக்ரைன் ஏதிலிச் சிறுமிக்காக பிரதேச மக்கள் கூடி தங்களது அஞ்சலி செலுத்தியுள்ளனர். 








கனடாவில் உக்ரைன் ஏதிலிச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதான உக்ரைன் ஏதிலிச் சிறுமி உயிரிழந்துள்ளார்.கனடாவின் மொன்ட்றியலின் Ville-Marie borough இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் வெளியிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.மாரியா என்ற சிறுமியும் அவரது சகோதரனும், சகோதாரியும் அருகாமையில் உள்ள பாடசாலைக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பாதையை கடந்த போது வாகனமொன்று சிறுமியை மோதிச் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் பின்னர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.பாடசாலை வலயத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொன்றியல் வீதியில் இந்த ஆண்டில் 4 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.விபத்தில், உயிரிழந்த உக்ரைன் ஏதிலிச் சிறுமிக்காக பிரதேச மக்கள் கூடி தங்களது அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement