• Apr 24 2024

வற்புறுத்திய கள்ளக்காதலி- தீர்த்துக்கட்டிய கோவில் பூசாரி - வெளியான பகீர் பின்னணி! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 6:40 pm
image

Advertisement

இந்தியாவின்  தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரை கோவில் பூசாரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசிய கொடூர சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா. சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் சாய்-க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் கோவிலுக்கு அப்சரா என்ற பெண் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அபோது அப்சராவுக்கும் - சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அக்சரா வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சமாளித்து வந்த கிருஷ்ணா, அப்சரா இருந்தால் தன் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு பெண்ணை அழைத்துக்கொண்டு சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அப்சராவின் தலையை சுவற்றில் மோதி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார்.

உடலை அப்படியே விட்டுசென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என எண்ணியவர் தாங்கள் வந்த காரிலே அப்சராவின் உடலை ஏற்றிக்கொண்டு சென்று கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்தப்பெண் பெண்ணின் உடலை மூட்டைக்கட்டியுள்ளார்.

அதன் பின்னர் பாதாள சாக்கடையின் மூடியை திறந்து உடலை அதில் வீசிய பின்னர் என்ன நினைத்தாரோ நேராக காவல் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

பெண்ணுக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் புகார் அளித்த காரணத்தால் போலீசாருக்கு சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டது.  எனவே சாய் கிருஷ்ணாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா தெரிவித்தார்.

அத்துடன் இவர் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வற்புறுத்திய கள்ளக்காதலி- தீர்த்துக்கட்டிய கோவில் பூசாரி - வெளியான பகீர் பின்னணி samugammedia இந்தியாவின்  தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரை கோவில் பூசாரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசிய கொடூர சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா. சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் சாய்-க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மேலும் கோவிலுக்கு அப்சரா என்ற பெண் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அபோது அப்சராவுக்கும் - சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அக்சரா வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சமாளித்து வந்த கிருஷ்ணா, அப்சரா இருந்தால் தன் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு பெண்ணை அழைத்துக்கொண்டு சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு அப்சராவின் தலையை சுவற்றில் மோதி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார்.உடலை அப்படியே விட்டுசென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என எண்ணியவர் தாங்கள் வந்த காரிலே அப்சராவின் உடலை ஏற்றிக்கொண்டு சென்று கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்தப்பெண் பெண்ணின் உடலை மூட்டைக்கட்டியுள்ளார்.அதன் பின்னர் பாதாள சாக்கடையின் மூடியை திறந்து உடலை அதில் வீசிய பின்னர் என்ன நினைத்தாரோ நேராக காவல் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.பெண்ணுக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் புகார் அளித்த காரணத்தால் போலீசாருக்கு சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டது.  எனவே சாய் கிருஷ்ணாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா தெரிவித்தார்.அத்துடன் இவர் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement