'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் இன்று(9) காலை ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விடயங்களை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார்,
யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகளை கடந்துள்ள போதும் தமிழ் மக்களுக்கான நீதி இதுவரை கிடைக்கபெறவில்லை என்றும் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை அடிக்கி ஒடுக்குகின்ற செயற்பாட்டினையே முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலானது எதிர்வரும் 15 ம் திகதி.வரை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.