திருகோணமலை - தோப்பூர் - ஹிதாயத் பள்ளிவாயல் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நேற்றிரவு பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபரிடம் அடையாள அட்டை எதுவும் கிடையாது. இருப்பினும் பொதுமக்கள் அவரிடம் ஊர் தொடர்பாக, வந்த காரணம் குறித்து விசாரித்தபோது ஒவ்வொருவரிடம் வெவ்வேறு விதமாக தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் ஆக்ரோசமாக காணப்பட்டனர்.
இந்நிலையில் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபரை ஹிதாயத் பள்ளிவாசல் நிருவாகத்தினர் பொறுப்பெடுத்ததோடு கூடி நின்ற இளைஞர்களை சுமூக நிலைக்கு கொண்டு வந்து அவருக்கு தாக்குதல் எதுவும் நடக்காத வகையில் காப்பாற்றியிருந்தனர்.
இதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து பொலிஸார் அவரை மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த நபர் சுகயீனமானவரா? அல்லது வேறு ஏதும் காரணத்திற்கு வந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்திடமான முறையில் நடமாடிய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள். திருமலையில் சம்பவம் samugammedia திருகோணமலை - தோப்பூர் - ஹிதாயத் பள்ளிவாயல் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நேற்றிரவு பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த நபரிடம் அடையாள அட்டை எதுவும் கிடையாது. இருப்பினும் பொதுமக்கள் அவரிடம் ஊர் தொடர்பாக, வந்த காரணம் குறித்து விசாரித்தபோது ஒவ்வொருவரிடம் வெவ்வேறு விதமாக தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் ஆக்ரோசமாக காணப்பட்டனர்.இந்நிலையில் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபரை ஹிதாயத் பள்ளிவாசல் நிருவாகத்தினர் பொறுப்பெடுத்ததோடு கூடி நின்ற இளைஞர்களை சுமூக நிலைக்கு கொண்டு வந்து அவருக்கு தாக்குதல் எதுவும் நடக்காத வகையில் காப்பாற்றியிருந்தனர்.இதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து பொலிஸார் அவரை மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.குறித்த நபர் சுகயீனமானவரா அல்லது வேறு ஏதும் காரணத்திற்கு வந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.