• Apr 19 2024

தோண்டி எடுக்கப்பட்டது வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம்! samugammedia

Chithra / May 25th 2023, 11:46 am
image

Advertisement

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்திற்கு அருகில் வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோண்டி எடுக்கப்பட்டது வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் samugammedia நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்திற்கு அருகில் வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதேவேளை தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement