சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடங்களுக்கு பிறகு நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் ரஜினிகாந்த்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை நோக்கி ’தலைவா’ என கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.