நானுஓயா - காவல்துறை பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்கலாவத்த பகுதியில் விவசாய நிலத்தில் தொழில் புரிந்த நபர் ஒருவர் விவசாய தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் விவசாய தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது மழையுடனான காலநிலை காரணமாக தோட்டத்தில் ஓரத்தில் இருந்து வழுக்கி நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் விழுந்துள்ளார்.
இதனால், அவரது தலையில் பலமாக அடிப்பட்டதனால் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விவசாய தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம். samugammedia நானுஓயா - காவல்துறை பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்கலாவத்த பகுதியில் விவசாய நிலத்தில் தொழில் புரிந்த நபர் ஒருவர் விவசாய தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த முதியவர் விவசாய தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது மழையுடனான காலநிலை காரணமாக தோட்டத்தில் ஓரத்தில் இருந்து வழுக்கி நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் விழுந்துள்ளார்.இதனால், அவரது தலையில் பலமாக அடிப்பட்டதனால் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.