• May 18 2024

தண்டவாளத்தில் அமர்ந்திருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்! samugammedia

Chithra / Apr 2nd 2023, 2:15 pm
image

Advertisement

மொல்லிகொட பகுதியில் ரயில் பாதையில் இன்று (02) காலை அமர்ந்திருந்த நபர் மீது எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வாதுவ, மொல்லிகொட, புனித பெட்ரிக் வீதியில் வசித்த குணசிங்க சமந்த சந்திரகுமார டி சில்வா என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மொல்லிகொட பகுதியில் சென்ற போது குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ரயில் நிலைய பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தண்டவாளத்தில் அமர்ந்திருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் samugammedia மொல்லிகொட பகுதியில் ரயில் பாதையில் இன்று (02) காலை அமர்ந்திருந்த நபர் மீது எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் வாதுவ, மொல்லிகொட, புனித பெட்ரிக் வீதியில் வசித்த குணசிங்க சமந்த சந்திரகுமார டி சில்வா என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மொல்லிகொட பகுதியில் சென்ற போது குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில் ரயில் நிலைய பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement