முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயக பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் இன்று காலை 8:30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.