• May 17 2024

பண்டிகை காலங்களில் மின்வெட்டு இல்லை - ஆனால் மின் கட்டணம் அதிகரிக்கும்! அமைச்சர் அறிவிப்பு

Chithra / Dec 21st 2022, 12:44 pm
image

Advertisement

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் அறிவிப்பையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

டிசம்பர் 24, 25, 26 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் மின்வெட்டு இல்லை - ஆனால் மின் கட்டணம் அதிகரிக்கும் அமைச்சர் அறிவிப்பு ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.மேலும் அடுத்த வருடம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் அறிவிப்பையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.டிசம்பர் 24, 25, 26 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement