அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இலங்கையில் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம், பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.