தலவாக்கலை நகரத்தில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களால் ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஹாட்வெயார், மருந்தகம் , உணவகம் , ரயர்கடை , வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், மரக்கறி கடை என ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடைகளின் கதவு யன்னல், இரும்பு கதவுகளை உடைத்து திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.