தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதாது என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்தபோதும் நேற்று (11) மாலை கூடிய கட்சியின் கூட்டத்தில் கடிதம் அனுப்பாதிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு இங்குள்ள ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம் மக்கள் போன்ற எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களின் பிரச்சினைகளை அடிக்கடி இந்தியாவுக்கு கடிதம் மூலம் எழுத வேண்டிய தேவை கிடையாது.
இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை.- என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுகிறதா. – மனோ எம்.பி. வெளியிட்ட தகவல் samugammedia தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதாது என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.முன்னதாக தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்தபோதும் நேற்று (11) மாலை கூடிய கட்சியின் கூட்டத்தில் கடிதம் அனுப்பாதிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.இந்தியாவுக்கு இங்குள்ள ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம் மக்கள் போன்ற எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களின் பிரச்சினைகளை அடிக்கடி இந்தியாவுக்கு கடிதம் மூலம் எழுத வேண்டிய தேவை கிடையாது.இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை.- என்றார்.