மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றையதினம் இடம்பெறவிருந்த வெள்ளோட்டப் பவனி பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் இன்று நடைபெறவிருந்த வெள்ளோட்டப் பவனி எதிர்வரும் புதன் கிழமைக்கு(31) பிற்போடப்பட்டுள்ளதாக திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை அறிவித்துள்ளது.