• May 07 2024

யாழ். பண்ணையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீசியவர் கைது..! விசாரணையில் வெளியான தகவல் samugammedia

Chithra / May 28th 2023, 1:56 pm
image

Advertisement

யாழ். பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரன் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்ணை பகுதியில் பொலிஸாரின் சோதனை சாவடியில் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது சனிக்கிழமை (27) இரவு நபர் ஒருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, கண்ணாடிகளை உடைத்துள்ளார். 

அதனை அடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் மது போதையிலையே கல் வீசினேன் என தெரிவித்துள்ளார். 

அந்நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 



யாழ். பண்ணையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீசியவர் கைது. விசாரணையில் வெளியான தகவல் samugammedia யாழ். பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரன் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணை பகுதியில் பொலிஸாரின் சோதனை சாவடியில் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது சனிக்கிழமை (27) இரவு நபர் ஒருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, கண்ணாடிகளை உடைத்துள்ளார். அதனை அடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் மது போதையிலையே கல் வீசினேன் என தெரிவித்துள்ளார். அந்நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement