கடந்த 17ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்கரையில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் படகை துரிதமாக மீட்கப்பட்டதை ஐநா மனித உரிமைகள் பேரவை, அகதிகள் அமைப்பு என்பன பாராட்டியுள்ளன.
வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் விரைவான நடவடிக்கையை அந்த அமைப்புக்கள் பாராட்டியுள்ளன.
17ஆம் திகதி மாலை சுமார் 105 ரோஹிங்கியா அகதிகள் இலங்கையின் வடபகுதியில்- வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிப்பதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர்.
உடனடியாக அவர்கள் கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் என்பனவற்றிற்கு தகவல் வழங்கினர். அத்துடன், உள்ளூர் மீனவர்களும் அங்கு மீட்பு நடவடிக்கைக்கு சென்றனர்.
டிசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்ககப்பட்டனர்.
UNHCR இன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்த கூறுகையில், “இலங்கை கடற்படை மற்றும் உயிர்களை காப்பாற்ற செயல்பட்ட உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். கடலில் ஏற்படும் துயரமான உயிரிழப்பைத் தடுக்க உடனடியாகவும் விரைவாகவும் செயல்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
UNHCR இலங்கை அதிகாரிகளும் அகதிகளின் உடனடித் தேவைகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறது.
UNHCR, சட்டக் கடமைகள் மற்றும் மனிதாபிமான மரபுகளுக்கு இணங்க, படகுகளில் தத்தளித்து, துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுமாறு அனைத்துப் பொறுப்புள்ள நாடுகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் மற்றொரு படகு பேரழிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு - வடமராட்சி மீனவர்களுக்கு ஐ.நா. பாராட்டு கடந்த 17ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்கரையில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் படகை துரிதமாக மீட்கப்பட்டதை ஐநா மனித உரிமைகள் பேரவை, அகதிகள் அமைப்பு என்பன பாராட்டியுள்ளன.வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் விரைவான நடவடிக்கையை அந்த அமைப்புக்கள் பாராட்டியுள்ளன.17ஆம் திகதி மாலை சுமார் 105 ரோஹிங்கியா அகதிகள் இலங்கையின் வடபகுதியில்- வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிப்பதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் என்பனவற்றிற்கு தகவல் வழங்கினர். அத்துடன், உள்ளூர் மீனவர்களும் அங்கு மீட்பு நடவடிக்கைக்கு சென்றனர்.டிசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்ககப்பட்டனர்.UNHCR இன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்த கூறுகையில், “இலங்கை கடற்படை மற்றும் உயிர்களை காப்பாற்ற செயல்பட்ட உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். கடலில் ஏற்படும் துயரமான உயிரிழப்பைத் தடுக்க உடனடியாகவும் விரைவாகவும் செயல்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.UNHCR இலங்கை அதிகாரிகளும் அகதிகளின் உடனடித் தேவைகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறது.UNHCR, சட்டக் கடமைகள் மற்றும் மனிதாபிமான மரபுகளுக்கு இணங்க, படகுகளில் தத்தளித்து, துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுமாறு அனைத்துப் பொறுப்புள்ள நாடுகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறது.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் மற்றொரு படகு பேரழிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.