யாழ்ப்பாணம் சுன்னாகம் தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தி 5 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு தாக்குதல் காரணமாக வீட்டுக்குள் இருந்த தந்தை, தாய், மகன் மற்றும் இரண்டு மகள்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகத்தை மூடிய நிலையில் சென்ற சிலர் வீட்டை தாக்கி சேதப்படுத்தி விட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் சென்று வீட்டின் பிரதான வாயில் கதவின் ஊடாக உள்ளே நுழைந்த நபர்கள், வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதன் காரணமாக பெட்ரோல் குண்டை வீட்டுக்குள் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது samugammedia யாழ்ப்பாணம் சுன்னாகம் தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தி 5 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெட்ரோல் குண்டு தாக்குதல் காரணமாக வீட்டுக்குள் இருந்த தந்தை, தாய், மகன் மற்றும் இரண்டு மகள்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முகத்தை மூடிய நிலையில் சென்ற சிலர் வீட்டை தாக்கி சேதப்படுத்தி விட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.மோட்டார் சைக்கிள்களில் சென்று வீட்டின் பிரதான வாயில் கதவின் ஊடாக உள்ளே நுழைந்த நபர்கள், வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதன் காரணமாக பெட்ரோல் குண்டை வீட்டுக்குள் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.