• May 04 2024

இலங்கையிலிருந்து எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம்...!

Sharmi / Apr 22nd 2024, 12:38 pm
image

Advertisement

இலங்கையில் இருந்து 03 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகு மூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 03 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியில் பூநகரி கடற்கரையில் இருந்து  பைப்பர் படகில் புறப்பட்டு இன்றையதினம்(22) காலை  தனுஷ்கோடி அரிச்சல்முனை ஐந்தாவது மணற்பரப்பில் தரையிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த இராமேஸ்வரம் மரைன் பொலிஸார், மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இலங்கையிலிருந்து எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம். இலங்கையில் இருந்து 03 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகு மூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 03 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியில் பூநகரி கடற்கரையில் இருந்து  பைப்பர் படகில் புறப்பட்டு இன்றையதினம்(22) காலை  தனுஷ்கோடி அரிச்சல்முனை ஐந்தாவது மணற்பரப்பில் தரையிறங்கியுள்ளனர்.இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த இராமேஸ்வரம் மரைன் பொலிஸார், மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement