• May 04 2024

மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து மதுரங்குளியில் தீப்பந்தப் போராட்டம்! SamugamMedia

Tamil nila / Feb 25th 2023, 9:20 pm
image

Advertisement

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் - மதுரங்குளி நகரில் இன்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள்,  வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தீப்பந்தம் ஏந்தி "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கதே", "மின் கட்டணத்தை உயர்த்தாதே" என இதுபோன்று பல கோஷங்களை எழுப்பினர்.



மேலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மக்கள் மீது வரிச் சுமையை திணிக்க வேண்டாம் என்றும் நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து மதுரங்குளியில் தீப்பந்தப் போராட்டம் SamugamMedia மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் - மதுரங்குளி நகரில் இன்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள்,  வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தீப்பந்தம் ஏந்தி "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கதே", "மின் கட்டணத்தை உயர்த்தாதே" என இதுபோன்று பல கோஷங்களை எழுப்பினர்.மேலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மக்கள் மீது வரிச் சுமையை திணிக்க வேண்டாம் என்றும் நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement