ஸ்கொட்லாந்து இழுவைப்படகொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்வெர்க்ளைட் நகரமான க்ரீனாக்கிற்கு அருகில் உள்ள ஃபிர்த் ஆஃப் கிளைட் பகுதியில் குறித்த கப்பல் விபத்துகுள்ளாகியுள்ளது.
குறித்த கப்பலில் இரண்டு பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் என்னவாயிற்று என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், காவல்துறை, கடலோரக் காவல்படை இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.