எம்பிலிப்பிட்டிய - மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில், ஜா-எலவில் இருந்து போபிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீதியில் பயணித்த 27 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோகம் - மோதிய மோட்டார் சைக்கிள். இருவர் பலி samugammedia எம்பிலிப்பிட்டிய - மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இதேவேளை, பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில், ஜா-எலவில் இருந்து போபிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவத்தில் வீதியில் பயணித்த 27 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.