கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்றுஇடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் இரு பேருந்துகளின் சாரதிகள் உள்ளிட்ட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.