தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பெளத்த மயமாக்கலை தடுக்க வேண்டும். போன்ற முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாட்டில் யாழ் மருதனார் மடம் சந்தை பகுதியில் இன்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கயதீபன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்