அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமாக ஜனாதிபதியின் அதிகாரத்திற்குள் செய்யக்கூடிய விடயங்களை உடனடியாக ரணில் விக்கிரமசிங்க செய்யவேண்டுமென வலியுறுத்துவதற்கு, கட்சிகளுக்குள் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சிர்த்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் நடைபெற்ற பங்காளி கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.