• Sep 17 2024

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள்!

Sharmi / Jan 9th 2023, 4:28 pm
image

Advertisement

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை  சிற்றூழியர்கள் இன்று (09) காலை வைத்தியசாலை வாயில் முன்பாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி, முறையான நியமனம் வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் முடிவில் வைத்தியசாலையிலிருந்து பேரணியாக சென்று மணிக்கூட்டு சந்தியூடாக மீண்டும் வைத்தியசாலையினை சென்றடைந்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை  சிற்றூழியர்கள் இன்று (09) காலை வைத்தியசாலை வாயில் முன்பாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி, முறையான நியமனம் வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.போராட்டத்தின் முடிவில் வைத்தியசாலையிலிருந்து பேரணியாக சென்று மணிக்கூட்டு சந்தியூடாக மீண்டும் வைத்தியசாலையினை சென்றடைந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement