விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் உரையாற்றினார் எனக்கூறி உரை ஒன்று வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், துவாரகா உட்பட பிரபாகரனுடைய குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகத்துறை பேச்சாளர் ஜயாத்துறை சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28.11.2023) நடைபெற்ற கூடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -
புலிகள் இயக்கத்தில் தற்போது பல்வேறு அணிகள் உருவாகியுள்ளது. அந்த அணியிலிருந்தே இவ்வாறான உரை வெளியாகியுள்ளது.
அதிலே கூறப்பட்ட விடயம் பிற்போக்கானது என கூறப்படுகின்றது. சர்வதேசம் ஒரு தீர்வை வைத்தால் அதற்கான முன்னேற்றகரமானது என்றும் தாம் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்
துவாரகாவின் பெயரால் அவ் அணியினர் இவ்வாறான கருத்தினை வெளியிட்டு இருக்கின்ற சூழலில் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். பேச்சுவார்த்தையினூடாக நல்லிணக்க அரசியலின் ஊடாக பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும்.
அரசியலின் ஊடாக சர்வதேச மட்டத்தில் தீர்வினை காண வேண்டும் என அந்த உரையின் ஊடாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
துவாரகா உயிரிடன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
வருகை தந்ததது துவாரகா தானா. - பேசப்பட்ட விடயத்தினை வரவேற்கும் ஈ.பி.டீ.பி. samugammedia விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் உரையாற்றினார் எனக்கூறி உரை ஒன்று வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், துவாரகா உட்பட பிரபாகரனுடைய குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகத்துறை பேச்சாளர் ஜயாத்துறை சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28.11.2023) நடைபெற்ற கூடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - புலிகள் இயக்கத்தில் தற்போது பல்வேறு அணிகள் உருவாகியுள்ளது. அந்த அணியிலிருந்தே இவ்வாறான உரை வெளியாகியுள்ளது.அதிலே கூறப்பட்ட விடயம் பிற்போக்கானது என கூறப்படுகின்றது. சர்வதேசம் ஒரு தீர்வை வைத்தால் அதற்கான முன்னேற்றகரமானது என்றும் தாம் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்துவாரகாவின் பெயரால் அவ் அணியினர் இவ்வாறான கருத்தினை வெளியிட்டு இருக்கின்ற சூழலில் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். பேச்சுவார்த்தையினூடாக நல்லிணக்க அரசியலின் ஊடாக பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும். அரசியலின் ஊடாக சர்வதேச மட்டத்தில் தீர்வினை காண வேண்டும் என அந்த உரையின் ஊடாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். துவாரகா உயிரிடன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்