ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு எவ்வித சட்டரீதியான அதிகாரமும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அதன் உறுப்பினர்களால் நேற்று (18) கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கட்சியின் புதிய நியமனங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை துமிந்த திஸாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்ததையடுத்து,
கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால புதிய நியமனங்கள் தொடர்பாக ஆணைக்குழுவில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்தார்.