நாளையதினம்(24) கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ள நிலையில் விளக்கீடு வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை வளாகத்தில் உள்ள கடைகளில் விளக்கீடு வியாபாரமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
யாழில் தற்போது பெய்துவரும் கனமழையினால் மக்கள் பெருமளவில் வரவில்லை என்பதுடன் மழையின் பொழுது விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்குகளை படங்கால் மூடுவதும் திறப்பதுமாக இருக்கின்றோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நாளை ஞாயிறு விடுமுறை என்பதால் ஒருவேளை வியாபாரம் களைகட்டும் என்ற நம்பிக்கையில் நாளைய பொழுதுக்காக காத்திருக்கின்றார்கள்.