விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆப்பனுர் கிராமத்திற்கு செல்லும் வலியுள்ள முருகன் கோயிலில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தலில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐயனார்புரத்தினை சேர்ந்த 50 வயதான கோவில் ராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலினை மீட்ட பொலிசார் விசாரணைகளினை மேற்கொண்ட பொழுது, கோவில் ராஜாவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளிற்கு பிறந்த பிள்ளைகள் திருமணம் செய்து தனியாக வாழ்க்கையினை ஆரம்பிக்க தனிமையில் வாடிய கோவில் ராஜா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கோவில் ராஜாவின் மூன்றாவது மனைவியும் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
அதையடுத்து, சொந்த ஊரினை விட்டு வெளியேறி வேம்பக் கோட்டை எனும் பகுதியில் வேலை பார்க்கும் போது அங்கு மரியம்மாளுடன் பழக்கம் ஏற்பட அவரை நான்காவதாக மணந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான கோவில் ராஜா மரியம்மாளுடன் தகராறில் தொடர்ந்து ஈடுபட்டதால் மரியம்மாளும் அவரை விட்டு விலக மீண்டும் சொந்த ஊரிற்கு திரும்பியுள்ளார் கோவில் ராஜா.
அங்கு நூற்பாலை ஒன்றில் உடன் பணியாற்றிய அதிஷ்டலச்சுமி என்பவரினை மணந்து கொண்டுள்ளார். அவருடனும் குடித்து விட்டு சந்தேகத்தின் பெயரில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் விலகி சென்ற நான்காவது மனைவியான மரியம்மாளுக்கு நூல் விட்டு சமாதானமும் செய்து தொடர்பில் இருந்தும் வந்தமை அதிஷ்டலச்சுமிக்கு தெரிய வர சண்டை பிடித்துள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த கோவில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.