திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பு வைத்து உழவு இயந்திரமொன்று பிரண்டு விபத்துக்குள்ளானதில் 07 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஏழு நபர்களில், ஐவர் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மற்றைய இருவரும் தோப்பூர் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனைய இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கோயில் நிகழ்வொன்றுக்காக விறகெடுத்து வரும் வழியிலிலேயே உழவு இயந்திரம் பிரண்டு இவ் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் கோயில் நிகழ்வுக்காக விறகெடுக்கச் சென்ற ஏழு பேருக்கு நேர்ந்த கதி. samugammedia திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பு வைத்து உழவு இயந்திரமொன்று பிரண்டு விபத்துக்குள்ளானதில் 07 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த ஏழு நபர்களில், ஐவர் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மற்றைய இருவரும் தோப்பூர் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏனைய இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர்.கோயில் நிகழ்வொன்றுக்காக விறகெடுத்து வரும் வழியிலிலேயே உழவு இயந்திரம் பிரண்டு இவ் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.