இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் தற்பொழுது காணப்படவில்லை என விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
காங்கேசன்துறைமுக பயணிகள் ரேமினல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்பொழுது காங்கேசன் துறையில் பயணிகள் ரேமினல் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியா மற்றும் காங்கேசன்துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருட கடைசியாக இருக்கலாம் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம். ஆனால் வேலைகள் முடிவற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சென்னை - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும். யாழில் அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் தற்பொழுது காணப்படவில்லை என விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.காங்கேசன்துறைமுக பயணிகள் ரேமினல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்பொழுது காங்கேசன் துறையில் பயணிகள் ரேமினல் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.எனினும் இந்தியா மற்றும் காங்கேசன்துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருட கடைசியாக இருக்கலாம் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம். ஆனால் வேலைகள் முடிவற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.