நீதி அமைச்சரால் முன் மொழியப்பட
இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா என
திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி
கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று (24)அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டிற்கான
சட்டம் என்பது அனைத்து இன மக்களுக்கும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டுமே
தவிர அது சிறுபான்மை சமூகத்தையும் எதிர்கட்சி அரசியல் தரப்பினரையும்
அடக்கி, நசுக்குகின்ற தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது.
கடந்த
காலங்களிலே முஸ்லிம், தமிழ் சமூகமும் அரசியல் எதிரிகளும், சிறுபான்மை
தலைமைகளும் பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒன்றால் அநியாயமாக பழி
வாங்கப்பட்டார்கள்.
தற்போது கொண்டு வரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் அவ்வாறான தன்மைகளை கொண்டிருக்கக் கூடாது.
பயங்கரவாத
எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை
கொண்டு வந்து கொள்ளையடிக்கப் பட்ட நாட்டின் தேசிய சொத்துக்களை தேசிய
உடமைகளாக்குவதோடு ஊழல்வாதிகளை தண்டிக்கவும் வேண்டும்.
பயங்கரவாத
தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர்
மும்மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் கவனத்திற்கு
கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.