கிழக்கு மாகாணத்தில் அனைத்து மதங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்ற பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவகத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கடந்த காலத்தில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை போன்று கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.