• May 17 2024

மின்கம்பியில் சிக்குண்டு பெண் பரிதாபமாக உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சோகம்..! samugammedia

Chithra / Oct 16th 2023, 7:37 am
image

Advertisement

 

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம்(15) மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் ஆவார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்  உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில்,  தாய் மரணம் அடைந்துள்ளார்.  

82 வயதான  இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு, இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் சடலம்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.


மின்கம்பியில் சிக்குண்டு பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தமிழர் பகுதியில் சோகம். samugammedia  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம்(15) மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் ஆவார்.இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்  உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில்,  தாய் மரணம் அடைந்துள்ளார்.  82 வயதான  இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு, இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.இவரின் சடலம்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement