அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டிலும் கர்ப்பம் தரித்துள்ள அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கெல்சி ஹேட்சர் (Kelsey Hatcher) என்ற பெண், இரண்டு கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார்.
அதைவிட அதிசயம், அந்த இரண்டு கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவ வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கெல்சி மற்றும் அவரது கணவர், காலேப் (Caleb) இதை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கெனவே ஏழு, நான்கு மற்றும் இரண்டு வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். வரும் கிறிஸ்துமஸுக்கு இந்த இரண்டு குழந்தைகளும் பிறக்கவுள்ளன. ஆனால், ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்கக்கூடும் என்பதால், குழந்தைகள் மணிநேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
கெல்சி தனது கணவரிடம் தன் வயிற்றில் இரண்டு கரு வளர்கிறது என்று சொன்னபோது அதை அவர் நம்பவில்லை. ஆனால் அதை மருத்துவர்கள் உறுதி செய்தபோது அவர் ஆச்சரியம் அடைந்தார்.
தற்போது தன் மனைவியை மிக கவனமாக பாதுகாத்து வருகிறார்.
பெண் கரு உருவாகும்போது, கருப்பை இரண்டு சிறிய குழாய்களை உருவாக்குகிறது. அது வளரும்போது, குழாய்கள் ஒன்றாக இணைந்து கருப்பையை உருவாக்குகின்றன.
சில நேரங்களில் குழாய்கள் சரியாக இணைவதில்லை. அதற்கு பதிலாக இரண்டும் தனித்தனி உறுப்புகளாக உருவாகின்றன. இது இரட்டை கருப்பையாகும்.
இந்த வழியில் உருவாகும் கருப்பை பொதுவாக கருப்பை வாயை யோனிக்குள் திறக்கும். இந்த திறப்பு கருப்பை வாய் என்று அழைக்கப்படுகிறது.
மற்ற சமயங்களில், ஒவ்வொரு கருப்பைக்கும் அதன் சொந்த கருப்பை வாய் இருக்கும். இந்த வகை இரட்டை கருப்பை உள்ள பெண்களில், கர்ப்பமும் நன்றாக வளரும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், கருச்சிதைவு மற்றும் முன்கூட்டியே பிறப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆயிரம் பெண்களில் மூன்று பேருக்கு இரட்டை கருப்பை காணப்படுகிறது. கெல்சியின் உடல்நிலை குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் கேட்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
இரட்டை கருப்பை கொண்ட பெண்- இரு குழந்தைகள் - 50 கோடியில் ஒருத்தி samugammedia அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டிலும் கர்ப்பம் தரித்துள்ள அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கெல்சி ஹேட்சர் (Kelsey Hatcher) என்ற பெண், இரண்டு கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார்.அதைவிட அதிசயம், அந்த இரண்டு கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.மருத்துவ வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கெல்சி மற்றும் அவரது கணவர், காலேப் (Caleb) இதை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகின்றனர்.இவர்களுக்கு ஏற்கெனவே ஏழு, நான்கு மற்றும் இரண்டு வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். வரும் கிறிஸ்துமஸுக்கு இந்த இரண்டு குழந்தைகளும் பிறக்கவுள்ளன. ஆனால், ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்கக்கூடும் என்பதால், குழந்தைகள் மணிநேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.கெல்சி தனது கணவரிடம் தன் வயிற்றில் இரண்டு கரு வளர்கிறது என்று சொன்னபோது அதை அவர் நம்பவில்லை. ஆனால் அதை மருத்துவர்கள் உறுதி செய்தபோது அவர் ஆச்சரியம் அடைந்தார்.தற்போது தன் மனைவியை மிக கவனமாக பாதுகாத்து வருகிறார்.பெண் கரு உருவாகும்போது, கருப்பை இரண்டு சிறிய குழாய்களை உருவாக்குகிறது. அது வளரும்போது, குழாய்கள் ஒன்றாக இணைந்து கருப்பையை உருவாக்குகின்றன.சில நேரங்களில் குழாய்கள் சரியாக இணைவதில்லை. அதற்கு பதிலாக இரண்டும் தனித்தனி உறுப்புகளாக உருவாகின்றன. இது இரட்டை கருப்பையாகும்.இந்த வழியில் உருவாகும் கருப்பை பொதுவாக கருப்பை வாயை யோனிக்குள் திறக்கும். இந்த திறப்பு கருப்பை வாய் என்று அழைக்கப்படுகிறது.மற்ற சமயங்களில், ஒவ்வொரு கருப்பைக்கும் அதன் சொந்த கருப்பை வாய் இருக்கும். இந்த வகை இரட்டை கருப்பை உள்ள பெண்களில், கர்ப்பமும் நன்றாக வளரும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், கருச்சிதைவு மற்றும் முன்கூட்டியே பிறப்பு ஏற்படுகிறது.ஒவ்வொரு ஆயிரம் பெண்களில் மூன்று பேருக்கு இரட்டை கருப்பை காணப்படுகிறது. கெல்சியின் உடல்நிலை குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் கேட்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.