பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்துத் தங்கப் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.